பெற்றெடுக்காத அன்னை

கல்வெட்டுக் காலம் முதல் கணிப்பொறி காலம் வரை உள்ளத்தில் ஊற்றெடுக்கும் உண்மை உணர்வு அன்பே! அன்னையின் அன்பிற்கு அடுத்து அகிலத்தில் அன்பைப் பொழிபவர் ஆறுதலை பாங்குடனே தருபவர் ஆற்றிடும் நெஞ்சம் செவிலியரே! சூரியனுக்கு இரவில் ஓய்வு

நிலவுக்கு பகலில் ஓய்வு,

செவிலியரருக்கோ இல்லையே இப்படி ஓர் ஓய்வு

இரவு பகலாய் பணி செய்தாலும் சூரியனாய் சுட்டெரிக்காமல் அமாவாசையாய் கடுமை காட்டாமல் புன்னகை தனை முகத்தில் காட்டும் பூத்தொளி பௌர்ணமி செவிலியரே. படையெடுக்கும் கால தேவனும் நீ நடையெடுக்க பறப்பதென்ன கிளியே!!

கழிவிரக்கம் கொண்ட கண்ணில் கண்ணுறக்கம் கொள்வதில்லை பிணி நீக்கம் பணித்தளனிலே தன்னலத்தை பார்ப்பதில்லை பிறர்வழி துரத்தும் செயலினிலே சோர்வதும் தெரிவதில்லை எங்கும் செய்யும் தொழில் தெய்வமாகும், இங்கு தெய்வமே வந்து தொழில் செய்யும்!

தன் குழந்தைகளை கூட பராமரிக்க நேரமில்லை காரணம் தான் பெற்றெடுக்காத பிஞ்சு குழந்தைகளை கவனிக்கும் பணியில் இருப்பதனால்.

ஊதியத்திற்காக போராடினோம் ஊருக்கே தெரிந்தது உண்ண நேரமின்றி பம்பரமாய் வலம் வந்தோம்

உடல் சோர்வு நண்பன் ஆனது, மனசோர்வு பழகிப்போனது.

வாரம் நாள் மறந்து போனது, தூக்கம் எதிரியானது.

முக கவசம் உயிர்க்கவசமானது.

வீதிக்கே வந்தாலும் கைவிடவில்லை எங்களது மகத்தான சேவையை!

C. Ponnu Pappa,

Staff Nurse, Maa Kauvery.

Kauvery Hospital