மனம்ஒரு மாயை!

மனம் என்பது –

ஒரு அதிசயமான நிலை.

மனத்தில் எண்ணங்கள் உள்ளபோது மட்டுமே

மனம் உள்ளது!

எண்ணங்கள் இல்லையேல் –

மனம் இல்லை!

எண்ணங்களின் ஊற்று – மனதில் தான் உள்ளது.

இல்லாததை இருப்பதாகவும்,

இருப்பதை இல்லாததாகவும் எண்ணுவது – மாயை!

உண்மையைப் பொய் எனவும்,

பொய்யை உண்மை எனவும் நம்புவது – மாயை!

மாயைக்குள் மாயை என்பது –

அடுக்கடுக்கான சோப்புக் குமிழிகள் போன்றது.

அண்ட சராசரம் அனைத்தும் –

மாயையில் உழலும்
மனதின் செயல்கள் – தறிக் கெட்டவை!

உண்மைக்குப் புறம்பானவையாகவே இருக்கும்!

புலன்களால் கிரகிக்க முடியாத ஒன்றின் மேல் –

மனிதனுக்கு அபார நம்பிக்கை உள்ளதெனில்,

அதுவும் மாயையே!

நல்லவர்களை – கெட்டவர்களாகவும்,

கெட்டவர்களை – தெய்வமாகவும் வணங்குவது – மாயையே!

மூட நம்பிக்கைகளின் ஊற்றுக்கண் – மாயை!

மாயையை விலக்கி – தெளிந்து தேர்ந்தவன் தான் சித்தன்!

நீ வெற்றியடைவது – மனதை உன் வசப்படுத்து,

மாயையை வெல்லுங்கள்!

மெய்ப்பொருள் காண்பதே அறிவு.

GK. Balasubramani

Senior Physiotherapist, Salem

Kauvery Hospital